ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE 28, 2010
மாவட்ட அபிவிருத்தி மக்கள் நலன் அடங்கிய அறிக்கை அமைச்சர்களிடம் கையளிப்பு
கிளிநொச்சியில் அடுத்த மாதம் அமைச்சரவைக் கூட்டம்;
மாவட்ட அபிவிருத்தி மக்கள் நலன் அடங்கிய
அறிக்கை அமைச்சர்களிடம் கையளிப்பு
(லோரன்ஸ் செல்வநாயகம்)
அரசாங்கம் கிளிநொச்சியில் நட த்தவுள்ள அமைச்சரவைக் கூட்டத் தின் போது மாவட்டத்தின்
மேம் பாடு, மக்கள் நலன் குறித்த முக்கிய விடயங்களடங்கிய அறிக்கையினை
அமைச்சர்களுக்குக் கையளிக்கத் தீர் மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசா ங்க அதிபர்
ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இவ்வரிய சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொள்வதில்
பின்னிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், அமைச்சரவையி லும் மாவட்டத்தை
முன்னிலைப் படுத்திய விவகாரங்களுக்கு முக்கி யத்துவமளிக்குமாறு வேண்டுகோள்
விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.
கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட் டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதை
வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இது மாவட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங் களிப்பாக
அமையும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்துவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள் ளமையை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய
ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.
இது குறித்து கிளிநொச்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னோடி நட வடிக்கைகள்
சம்பந்தமாகக் கேட்டபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரி விக்கையில், கடந்த சுமார் மூன்று தசா ப்த காலமாக
யுத்த சூழலினால் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது.
இம்மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின்
வாழ்வாதாரம், குடிநீர், மின் சாரம், பாதைகள் புனரமைப்பு தொழில் முயற்சிகளை மீள
ஆரம்பித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளன.
இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு இவற்றை
நடைமுறைப்படுத்து வது சம்பந்தமாக வேண்டுகோள் விடுக் கப்படும்.
அத்துடன் இந்த விடயங்களை உள்ள டக்கிய அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கத்
தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.