ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE 28, 2010
இருப்பிடம் அற்றோருக்கு அரசாங்கத்தினால் காணிகள்
மன்னாரில் மீளக்குடியேறுவோரில்
இருப்பிடம் அற்றோருக்கு
அரசாங்கத்தினால் காணிகள்
(ஸாதிக் ஷிஹான்)
மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் காணிகள் அற்றவர்களுக்கு அரச காணிகளை வழங்க
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி
தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருடம் பெரும்போக நெற்செய்கையினை மேற்கொள்ளும் பொருட்டு 30 ஆயிரம்
ஏக்கர் நிலப்பரப்பை சுத்திகரித்து தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி க்குழுக் கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும்,
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர்
ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.
நீண்ட காலங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற
இந்தக் கூட்டத்தின் போது இம்மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு
அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்
தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் காடுகளாக
காணப்படுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்த அவர்,
இராணுவத்தின் ஒத்து ழைப்புடன் துரிதமாக சுத்திகரித்து மக்கள் விவசாய நடவடிக்கைகளை
மேற்கொள்ள வசதிகளை செய்து கொடுக்கவும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிய குளங்களை விவ சாய நடவடிக்கைகளுக்காக புனரமைப்புச் செய்யுமாறு
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதேவேளை, மடு கல்வி வலயத்தில் மீளக்குடியேறியுள்ள பிள்ளைகளின் கல் வித் தரத்தை
மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து இருவார காலத்திற்குள் அமைச்சருக்கும்,
ஆளுநருக்கும் சமர்ப்பிக்கும் வகையில் விசேட குழுவொன்றும் இந் தக் கூட்டத்தின் போது
நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாந்தை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 21 கிராமங்களிலும் முன் னெடுத்து வரும்
மீள் எழுச்சி மற்றும் கமநெகும திட்டங்களை 3 மாதகாலத்திற்குள் பூர்த்தி செய்ய
நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்குதல், புனர மைத்தல்
போன்றவை தொடர்பாகவும், இந்திய அரசு வடக்கில் நிர்மாணிக்கவுள்ள 51 ஆயிரம் வீடுகளை
வடமாகாண மக் களுக்கு பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.
சுகாதார, கல்வி, மேம்பாட்டுத் திட்டங் கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தின் போது
விரிவாக ஆராயப்பட்டதாக ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார். நானாட்டான், விடத்தல் தீவு
வைத்திய சாலைகளுக்கு வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டதை அடுத்து
செட்டிக்குளத்திலிருந்து ஆறு வைத்தியர்களை உடனடியாக அனுப்ப நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், செல் வம்
அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோனோதராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(ர-து)