ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, JANUARY 27, 2010
பகிடிவதை - மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாசாரம்
பகிடிவதை - மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாசாரம்
மன்னார் அமுதன்
(நேற்றைய தொடர்)
மாணவர்களாக இருந்த போது அவர்களும் நிச்சயமாக பகிடிவதைக்கு ஆளாகியிருப்பார்கள்.
மேலும் அவர்கள் மேலாண்டு மாணவர்களாகிய போது சில புதுமுக மாணவர்களை மென்
பகிடிவதைக்கு உட்படுத்தியதாகவும் சிரித்துக்கொண்டே பழைய நினைவுகளை இரைமீட்டினார்
ஒரு விரிவுரையாளர்.
போதிய பகிடிவதைக்கு உட்படுத் தப்பட்டிருப்பதிலும் இவ்விரிவுரை யாளர்கள்
தலைமைத்துவப் பண் புகளையோ, ஆளுமையையோ, ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றையோ பகிடிவதையின் மூலம்
பெற்றுக்கொள்ள வில்லையென்பதை, இக்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் பகிடிவதைப்
பிரச்சினைகளை அவர்களால் தீர்க்கமுடியவில்லை எனும் கார ணத்தைக் கொண்டு நாம் அறிந்து
கொள்ள முடியும்.
எனவே இக் காரணங்களிலிருந்து, பகிடிவதை மாணவர்களின் ஆளுமையையோ,
தலைமைத்துவப் பண்பையோ ஒருபோதும் விருத்தி செய்யாது என்பது தெளிவாகிறது. மேலும்
மாணவர்களிடையே ஓர் அன்புப் பாலத்தை பிணைப்பையும் பகிடி வதையால் ஏற்படுத்த முடியாது.
பகிடிவதையால் தனிமனித ஆளுமை கெடுகிறது. மேலாண்டு மாணவர்கள் புதுமுக மாணவர்களை பகிடி
வதைக்கு உட்படுத்தும் போது.
1. மேலாண்டு மாணவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள்.
2. புதுமுக மாணவர்களும் அவ்வாறே ஒரு குழுவாக வாழ வேண்டுமெனவும், தம்மைப் பின்பற்ற
வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
3. மேலும் தனி மாணவனாக எதையும் சாதிக்க முடியாது எனும் தவறான கருத்தை
விதைக்கிறார்கள்.
மேற்கூறிய மூன்று விடயங்களையும் புதுமுக மாணவர்களின் மனதில் பதிப்பதன் மூலம்
பகிடிவதை எனும் கொடூரத்தை எளிதில் நடத்தி முடிக்கிறார்கள். இவ்வாறு செய்கையில்
தனிமனிதச் செயல் திறன் மாணவர்களிடம் மழுங்கடிக்கப்படுகிறது.
மேலும் மேலாண்டு மாணவர்கள் ‘அட்டைப் பெயர்’களைப் பாவிக் கிறார்கள். இந்த அட்டைப்
பெயர்கள் அவர்களின் தனிமனித (மாணவ) அடையாளத்தை மறைத்துக்கொண்டு (ஒரு முகமூடியுடன்)
இக்கொடூர ங்களைச் செய்யத் துணைபுரிகிறது. எவ்வளவு கோழைகள் இவர்கள்?
மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது
என்னவென்றால் கல்வி நிலையத்தைத் தாண்டிய பின்பு தான் வாழ்க்கையின் மிக முக்கியமான
கட்டமே ஆரம்பிக்கிறது. பெற்றோரின் பணத்தில் சுகமாக வாழும்போது வாழ்க்கையின் பல்வேறு
பரிமாணங்கள் புலப்படுவதில்லை.
கல்வி நிலையத்துள் மாணவர்களாக நுழையும் நமக்குக் கற்க
மட்டுமே உரிமையுள்ளது. அது நமது பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் ஆகும்.
அதை விடுத்து மற்றொரு மாணவன் மீது அன்பு செலுத்த முடியாத ஒருவனுக்கு ஆதிக்கம்
செலுத்தவும் தகுதி இல்லை.
என்னுடைய முன்மொழிவின் படி இக்கல்வி நிறுவனத்தைச் சார்ந்து நடைபெறும் அனைத்துச்
சீரழிவு களுக்கும் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். பகிடிவதை எனும் நொடிப்பொழுது
சந்தோசம் எத்தனையோ மாணவர்களின் கல்விநிலையை மட்டும் பாதிப்பதோடு நின்று விடாமல்
எதிர்கால சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கி விடும்.
ஒவ்வொரு கல்வி, நிலையத்திலும் பகிடிவதை எதிர்ப்பு அமைப்புக்கள் மாணவர்கள் மத்தியில்
உருவாக்கப்பட வேண்டும். புதுமுக மாணவர்கள் தம்மை தொல்லைக்குட்படுத்தும் மாணவர்களின்
பெயர்களையும், முகங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எவருக்கும்
பயப்படாமல் நிர்வாகத்திடமோ, பேராசிரியர்களிடமோ தங்கள் பிரச்சினைகளைக் கூறி,
தீர்வுகாண முன் வரவேண்டும். அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தால் மனித
உரிமை அமைப்புகளிடம் அவர்களையும் இணைத்து புகார் கொடுக்க வேண்டும்.
நேரடியாகப் புகார் கொடுக்க விருப்பமில்லாத மாணவ, மாணவிகள் தமது பெற்றோர்களிடமாவது
பிரச்சினைகளைக் கூற வேண்டும். பெற்றோர் மூலமாக மாணவ விடுதி பாதுகாவலரிடமோ, அல்லது
பேராசிரியர்களிடமோ முறையிட வேண்டும்.
இக்கருத்துக்கள் ஏன் இங்கு வலியுறுத்தப்படுகின்றனவென்றால் இன்றைய புதுமுக
மாணவர்களால் மட்டும் தான் பகிடிவதை எனும் கொடூர காட்டுமிராண்டிக் கலாசாரத்தை
தடுத்து நிறுத்த முடியும். உங்களின் கீழ் பயில வரும் மாணவர்களுக்கும் இக்கலாசாரத்தை
எடுத்துச் செல் லாதீர்கள்.
நீங்கள் புதிய மாணவர்களை பகிடிவதைக்கு
உட்படுத்தாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களை எந்த விதத்திலும் தொல்லை செய்யப்
போவதில்லை. நாம் பட்ட துன்பம் போதும் இனிவருவோருக்கு வேண்டாம் எனும் மேன்மையான
எண்ணத்தை எம் மனங்களில் விதைத்துக் கொள்வோம். இதை ஒவ்வொரு மாணவனும் உணரும் போதே
பகிடிவதை எனும் மனநோய் நீங்கும்.
‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பது மூத்தோர் வாக்கு. தாம் பெறாக் கல்வியை தம்
பிள்ளைகளாவது பெற்றுவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஒவ்வொரு பெற்றோரும்
தம்பிள்ளைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். கல்வி நிலையத்தை ஒரு
பாதுகாப்பான இடமாகவே பெற்றோர்கள் உணர்கிறார்கள்.
பேராசிரியர்கள் மேலும் நல்லெண்ணமே
மாணவனை யும் வழிநடத்துகிறது. எனவே கல்வி நிலைய நிர்வாகமே பகிடிவதைக்கு எதிரான
அனைத்துச் சட்ட நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நடந்த பின்
காவல் துறையை நாடுவதை விட மாண வர்களின் தேவையறிந்து சட்டத்தைப் பாரபட்சமில்லாமல்
நடைமுறைப் படுத்துவதே நல்ல முகாமைத்துவ மாகும்.