ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, OCTOBER 07, 2009
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தேவையில்லை
இலங்கை தமிழ் அகதிகளுக்கு
இந்திய குடியுரிமை தேவையில்லை
அமைச்சர் முரளிதரன்
இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2
இலட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும்
இல்லையென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை
வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்
அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் காங்கிரஸ்
தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார்.