ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, OCTOBER 07, 2009
இராணுவ கண்காட்சி 11ம் திகதி வரை நீடிப்பு
இராணுவ கண்காட்சி
11ம் திகதி வரை நீடிப்பு
கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இராணுவக்
கண்காட்சி எதிர்வரும் 11 ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டு ள்ளது.
கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் இலட்சக் கணக்கான மக்கள் வருகை தருவதால்
அதனை நீடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த மூன்றாந் திகதி ஆரம்பமான இந்தக்
கண்காட்சியை ஏழாம் திகதி வரை நடத்துவதென ஏற் கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. (வி)