புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
பொழுதுபோக்கிற்காக தேர்தலில் போட்டி; இரட்டைப் பிரஜhவுரிமைக்காரர்கள் கபடம்

பொழுதுபோக்கிற்காக தேர்தலில் போட்டி; இரட்டைப் பிரஜhவுரிமைக்காரர்கள் கபடம்

அனுமதிக்கக் கூடாது என்கிறார் தங்கராசா

இரட்டை பிரஜாவுரிமை கொண்டோரை நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கவோ, இடமளிக்கவோ கூடாது என யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளரும், கட்சியின் மத்திய குழு அமைப்பாளருமான கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார்.

இத்தகையவர்கள் தமது குடும்பம், தமது நலன் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பர். போட்டியிட்டதும் குடியுரிமை பெற்ற நாடுகளுக்கு தமது மனைவி, பிள்ளைகளையும், உறவுகளையும் பார்க்க ஓடிவிடுவர்.

இங்கே பொழுது போக்கிற்காகவே வந்து செல்வர். இவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்களால் ஒருபோதுமே திருப்தியான சேவையைச் செய்ய முடியாது.

எனவே இத்தகைய இரட்டைக் குடியுரிமை கொண்டோர் இனிவரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் எனவும் கலாநிதி தங்கராசா தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.