புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 
வெற்றியிலும் தோல்வியிலும் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்

வெற்றியிலும் தோல்வியிலும் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்

மெளலவி அப்துல் ஹாலிக் அறிவுரை

ஆட்சியைக் கொடுப்பதும் பறிப்பதும் இறைவன்தான். முஸ்லிம் சமூகத்தினர் வெற்றியிலும் தோல்வியிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டுமேயன்றி, பட்டாசு கொளுத்தியும் ஊர்வலங்கள் நடத்தியும் மகிழ்ச்சி கொண்டாடக் கூடாது. மாற்று மதத்தவர்களினதும் மாற்றுக் கட்சிக்காரர்களினதும் மனம் புண்டாதவாறு நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இறைவன் வெற்றியைத் தந்தும் சோதிப்பான், தோல்வியைத் தந்தும் சோதிப்பான் என அஷ்ஷெய்க் மெளலவி அப்துல் ஹாலிக் பாஸி (பாஸி த பந்த்) தெரிவித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆப் பிரசங்கத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், எமது முஸ்லிம் சமுதாயம் கடந்த காலங்களில் முகம்கொடுத்த சோதனைகளை மறந்துவிடக் கூடாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.