ஜனநாயகத்துக்கான எழுத்தாளர் ஒன்றியத்தின் வாழ்த்துச் செய்தி
ஜனநாயகத்துக்கான எழுத்தாளர்
ஒன்றியத்தின் வாழ்த்துச் செய்தி
புதிதாக இந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இலங்கை
ஜனநாயகத்திற்கான எழுத்தாளர் ஒன்றியம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது.
அத்துடன் இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சாதி, மத இனபேதமற்று
ஒன்றித்துக் கரங்கோர்த்து, ஒரு புதிய ஸ்ரீலங்காவை உருவாக்க முயலும் அன்னாருக்கு
நிறைந்த சக்தியையும், மனோதிடத்தையும் அளிக்க இலங்கை ஜனநாயகத்திற்கான எழுத்தாளர்
ஒன்றியம் முழுப் பக்கபலம் சேர்க்கும் என்ற உறுதியையும் இவ்வொன்றியம் இச் செய்தி
மூலம் அறியத் தருகின்றது.
சிறந்த ஒரு பொதுவான ஸ்ரீலங்கா இலக்கியத்தை உருவாக்குவதே இவ்வமைப்பின் முக்கிய
குறிக்கோளாகும். அதன் மூலம் முக்கியமாய் இலங்கையில் வாழுகின்ற சிங்கள, தமிழ்,
முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வும், நட்புடைமையையும் மிளிரச்
செய்வதுமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. (வி)