தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரோஜh. திருமணத்திற்குப்
பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ரோஜh, தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு
கிளம்பி வந்துள்ளார்.
ஏற்கனவே சகுனி படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ள ரோஜh, தற்போது பாரதிராஜh இயக்கும்
அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் நடிகை கார்த்திகாவிற்கு அம்மாவாக
நடிக்கிறார்.
பாரதிராஜhவின் மற்றொரு கிராமத்துக் கதையில் நடிப்பது குறித்து நான் மிகவும்
சந்தோ'ப்படுகிறேன். நிச்சயம் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் பேசப்படும் என்று
நம்புகிறேன் என்றார் முன்னாள் கதாநாயகியும், இன்னாள் தாயுமான ரோஜh. இரண்டாவது
இன்னிங்சிலும் வெற்றி காண ரோஜhவிற்கு வாழ்த்துகள்.
லோரன்ஸின் அடுத்த படம் பரமன்
இயக்குநர் ராசு மதுரவன் மற்றும் நடன இயக்குநரும், நடிகருமான லாரஷ் இணைந்து
உருவாக்கிய பாண்டி படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது
பரமன் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
இது குறித்து இயக்குநர் ராசு மதுரவன் கூறுகையில், தற்போது மைக்செட் பாண்டி என்ற
படத்தை சபரிஷ் மற்றும் சுனைனாவை வைத்து இயக்கி வருகிறேன். இப்படத்தை முடித்த பிறகு
லாரன்சுடன் இணைந்து பரமன் படத்தை இயக்க உள்ளேன். லாரன்சுடன் மீண்டும் இணைந்து
பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்றார்.
உணர்வு பு+ர்வமான குடும்பக் கதைகளை எடுப்பதில் பெயர்போன இயக்குநரான ராசு மதுரவன்,
பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
இவர் அடுத்து 2025 என்ற பெயரில் முப்பரிமாண (3டி) படம் ஒன்றை இயக்கவும்
திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.