கண்டி நகரில் ஆண்டு தோறும் இடம்பெற்று வரும் எசலபெரஹர இவ்வாண்டு எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் 15 ஆம் திகதி நான்கு தேவாலயங்களிலும் இடம் பெறும் புனித வைபவங்களோடு ஆரம்பமாக
உள்ளதாக இது தொடர்பாக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேவ
தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஆகஸ்ட் 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை தேவாலய வளவுகளுக்குள்ளான
பெரஹரா வும் இடம்பெற ஏற்பாடாகி உள் ளது இதனை அடுத்தே வீதி வலம் வரும் பெரஹராக்கள்
நடத்தப்பட வுள்ளன.
இதனை அடுத்து 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கும்பல பெரஹரவும் 25 ஆம் திகதி
முதல் 29 ஆம் திகதி வரை ரந்தோலி எனப்படும் அலங்காரம் மிக்க உச்சகட்ட பெரஹராவும்
இடம்பெற்று 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பகல் பெரஹராவோடு இவ்வாண்டுக்கான கண்டி எசல
பெரஹரா வைபங்கள் நிறைவடையும்.