இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக இஸ்ரேல் விஜயம்
இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக இஸ்ரேல் விஜயம்
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்லவிருப்ப தாக வெளியுறவு அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ்
தெரி வித்துள்ளார். இந்தியப் பிரத மர் ஒருவர் இஸ்ரேல் செல் வது இதுவே முதல் முறை
யாகும்.
கடந்த ஓராண்டில் வெளி யுறவு அமைச்சின் சாத னைகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று
முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற் றது. அப்போது பேசிய சுஷ்மா ஸ்வராஜ்
, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இஸ்ரேல் செல்லும் இந்தியாவின்
முதல் பிரதமர் நரேந்திர மோடியே.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசாங் கம் இஸ்ரேலுடன் நல்லுறவில் இருந்தாலும் எந்த
ஒரு இந்தியப் பிரதமரும் அங்கு செல்லவில்லை.
கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சியின்போது அப்போதைய வெளியுறவு
அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேல் சென்றார். அதனைத் தொடர்ந்து 2003-ல் இஸ்ரேல் பிரதமர்
ஏரியல் N'ரோன் இந்தியா வந்தார். அவரே இந்தியா வந்த முதல் இஸ்ரேலிய பிரதமராவார்.
அவர் எப்போது அங்கு செல்வார் என்ற திகதி கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது
குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. அநேக மாக அவர் இந்த ஆண்டே இஸ்ரேல் செல்லலாம்.
இந்திய - இஸ்ரேல் நல்லுறவு குறித்து ஆலோ சிக்க அடுத்த மாதம் (ஜ_லை) இந்திய உயர்மட
டக் குழு ஒன்று இஸ்ரேல் செல்கிறது. அப்போது பிரதமரின் இஸ்ரேல் பயணம் தொடர்பாகவும்
ஆலோசிக்கப்படும். இந்த ஆண்டின் பிற்பாதியில் நானும் இஸ்ரேல், பாலஸ்தீ னம், ஜோர்டான்,
டெஹ் ரான் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன் என்றார்.
இதற்கிடையில் இந்தியா வுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன் பிரதமர் நரேந்திர மோடி
இஸ்ரேல் செல்ல திட்டமிடுவதை வர வேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது அண்மைக்
காலமாக இந்தியா, இஸ்ரேல் நாடுகளின் உயர்மட்ட குழுவினரின் பரஸ்பர பயணங்கள் நல்லுறவை
மேலும் வலுப் படுத்தியிருக்கிறது. அந்தவகையில் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வருகை
தருவதையும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா வருகை தருவதையும் நாங்கள் வரவேற்போம்
என்றார்.