இலங்கை பல்கலைக்கழக அணிகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற
உதைபந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் கிழக்குப் பல்கலைக்கழக அணி பெற்றுக்
கொண்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்
பெற்ற போட்டியில் வயம்ப பல்கலைக்கழக அணியும் கிழக்கு பல்கலைக் கழக அணியும் மோதிக்
கொண்டன.
இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக காணப்பட்ட நிலையில் முதல் பாதி ஆட்டத்தில்
கிழக்கு பல்கலைக்கழக அணி ஒரு கோலை பெற்று முன்னிலையில் காணப்பட்டது. இரண்டாம் பாதி
ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெற எடுத்த முயற்சிகள் கை கூடாத நிலையில் ஆட்டம்
சம நிலையில் முடிவடைந்தது.