ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

பொகவந்தலாவையில் 17 வயது சிறுமி தற்கொலை

பொகவந்தலாவையில் 17 வயது சிறுமி தற்கொலை

கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு சிறுமியொருவர் மரணமான சம்பவமொன்று பொகவந்தலாவ பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலிருந்த 17 வயதுடைய சிவபாலன் நனுசா என்ற பெண்ணே இவ்வாறு வீட்டில் யாருமில்லாத வேளையில் மரணமாகியிருந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் கையெழுத்தினால் எழுதப்பட்ட டயரி ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உறவினர்களின் முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன் மேற்படி மரணம் தற்கொலையா, கொலையா என அறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி