ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

மூன்று பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மூன்று பிள்ளைகளின் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மூன்று பிள்ளைகளின் தாயொருத்தியை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு மாத்தறை மேலதிக நீதிபதி பிரியந்த த சில்வா மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

திக்குவல்லை தம்பகஸ்சூர என்ற இடத்தைச் சேர்ந்த வை. ஜகத் (35) என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2001.12.30ந் திகதி யன்று பிரஸ்தாப பெண்ணின் கணவன் வீட்டிலில்லாத சமயத்தில், இரவு நேரம் வீட்டின் கதவை தட்டி கதவை திறக்க வைத்து தனது ஆசைக்கு இணங்க பெண் மறுப்புத் தெரிவிக்கவே கத்தியால் குத்தி மூன்று பிள்ளைகளின் தாயாரை கொலை செய்தான்.

அரச தரப்பு வழக்கறிஞர் ஷெஹான் சொய்சா இவ்வழக்கை நெறிப் படுத்தினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி