ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றியதாக 6 பேர் மீது வழக்கு

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றியதாக 6 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டம் வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயந்தி (வயது 22). ஜெயந்திக்கும் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதனை தொடர்ந்து ஜெயந்தி கர்ப்பமானார்.

மீண்டும் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது ராமச்சந்திரன், அவரது தம்பி கொளஞ்சி, தாய் வள்ளியம்மை, தங்கை லட்சுமி மற்றும் உறவினர்கள் முருகேசன், செல்வராஜ் ஆகியோர் ஜெயந்தியை மிரட்டியதாக தெரிகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி