கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு, குழந்தை பெற்ற பின் நினைவு திரும்பியது.
அமெரிக்காவின், கன்சாஸ் மாநிலத்தை சேர்ந்த, இளம் பெண், எபிகேல் உன்ரூ கடந்த ஆண்டு,
டிசம்பர் மாதம், உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்த எபிகேல்,
புத்தாண்டு அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏழு மாத கர்ப்பிணியான
எபிகேலுக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி
பொருத்தப்பட்டது.
இந்நிலையில், கோமா நிலைக்கு சென்ற எபிகேலுக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டதில்,
அவருக்கு, பறவை காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. சில அத்தியாவசிய மருந்துகளின்
உதவியால், அவரது கர்ப்பப்பையில் இருந்த குழந்தையின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
கோமா
நிலையில் இருந்த எபிகேலுக்கு, கடந்த மாதம், ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. குழந்தை
பிறந்து இரு வாரங்களுக்குப் பின், எபிகேலுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாகவும்,
தற்போது அவரது உடல்நிலை பலவீனமாக இருப்பதாகவும், டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.