ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

அமெரிக்காவில் பெற்ற மகனை கொன்ற இந்திய பெண் கைது

அமெரிக்காவில் பெற்ற மகனை கொன்ற இந்திய பெண் கைது

வாஷிங்டன், அமெரிக்காவில் ஹ¥ஸ்டனில் டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுமீத் தவான். அவருடைய மனைவி பல்லவி தவான் (வயது 38) இவர்கள் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், வியாபார விஷயமாக 3 வாரங்கள் வெளியூர் சென்றுவிட்டு, சுமீத் தவான், வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அவருடைய மனைவி இல்லை. குளியலறைக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள தொட்டியில் அவருடைய மகன் பிணமாக கிடந்தான்.

இதுபற்றி பொலிஸ¤க்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் பல்லவி, மகனை கொன்று விட்டு, குளியலறை தொட்டியில் பிணத்தை போட்டது. தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 2 நாள் சிறைவாசத்துக்கு பிறகு, 50 ஆயிரம் டொலர் பிணையில் விடுதலையானார். அவர் மனக் குழப்பத்தில் இருப்பதாக கணவர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி