|
||
அமெரிக்காவில் பெற்ற மகனை கொன்ற இந்திய பெண் கைது
வாஷிங்டன், அமெரிக்காவில் ஹ¥ஸ்டனில் டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுமீத் தவான். அவருடைய மனைவி பல்லவி தவான் (வயது 38) இவர்கள் இந்திய வம்சாவளியினர் ஆவர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், வியாபார விஷயமாக 3 வாரங்கள் வெளியூர் சென்றுவிட்டு, சுமீத் தவான், வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அவருடைய மனைவி இல்லை. குளியலறைக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள தொட்டியில் அவருடைய மகன் பிணமாக கிடந்தான். இதுபற்றி பொலிஸ¤க்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் பல்லவி, மகனை கொன்று விட்டு, குளியலறை தொட்டியில் பிணத்தை போட்டது. தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 2 நாள் சிறைவாசத்துக்கு பிறகு, 50 ஆயிரம் டொலர் பிணையில் விடுதலையானார். அவர் மனக் குழப்பத்தில் இருப்பதாக கணவர் தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |