துயர் போக்கும் தாய்
துயர் போக்கும் தாய்
ஆத்தாளே அன்னை முத்துமாரி தாயே!
அருதினமும் உன் காலடி பணிந்தோமம்மா
காத்தவளே கண்மணி போல் பூத்தவளே
கால முழுதும் உன் அடி துதித்தோம்மா
பண்ணாக பதியில் உறங்கும் மாரியே!
பக்தியோடு ஓடிவந்தோம் உன்னை நாடி!
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேர
எம்மை காத்தவளும் நியேம்மா!
பாடி பணிந்தோம் உன் பாதமலர்!
பாவங்களை தீர்த்து அருள்வாய் தாயே!
நாடி தேடி வரும் அடியவர்களுக்கு
நல்லருளை தாறவளும் நீயேம்மா!
ஆயிரம் கண்கொண்ட வளளே - மாரி
ஆதரித்து நல்லருள் வாய் தாயே!
பாயிரம் பாடி பணிந்தோம் உன் பாதம்
பாவங்களை தீர்த்தருள்வாய் தாயே!
சத்தியம் காப்பவளும் நீயே!
சரித்திரம் படைத்தவளும் நீயே!
நித்தினம் நிம்மதி தருபவளும் நீயே!
நின் புகழ் போற்றி பணிந்தோமே!
மாத்தளையில் உறங்கும் மாரியே
மகத்தான புகழ் கொண்டவள் நீ
எத்தனை துயர்கள் வந்தாளும்
அத்தனையும் போக்கிடும் தாயம்மா
- அலைமுகிலன்,
உடப்பூர்.
|