ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

ஜெகன் வழியில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல் உண்ணாவிரதம்

ஜெகன் வழியில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல் உண்ணாவிரதம்

தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி டில்லியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங் கினார்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைக்க மத்திய அமைச்ச ரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் பல்வேறு போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் ஐதராபாத்தில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கால வரையற்ற உண்ணா விரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருங் கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று முதல் உண்ணா விரதம் மேற் கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி