|
||
ஜெகன் வழியில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல் உண்ணாவிரதம்
தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி டில்லியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங் கினார். ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைக்க மத்திய அமைச்ச ரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் பல்வேறு போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் ஐதராபாத்தில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கால வரையற்ற உண்ணா விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில் ஒருங் கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி, தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் நேற்று முதல் உண்ணா விரதம் மேற் கொண்டார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |