பெந்தர - எல்பிட்டியவில் புதிய காணிப் பதிவக கட்டடம்
பெந்தர - எல்பிட்டியவில்
புதிய காணிப் பதிவக கட்டடம்
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்
பெந்தர - எல்பிட்டியவில் முப்பது மில்லியன் ரூபா செலவில் புதிய இரண்டு மாடிக்
கணிப்பதிவக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் காணிப்பதிவக
நடவடிக்கைகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் புதிய கட்டட
திறப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
பிரதம அமைப்பாளர் கீதாகுமார சிங்க, பதிவாளர் நாயகம் ஈ.எம். குணசேகர, சட்டத்தரணி எல்.
விஜேநாயக, பெந்தர எல்பிடிய பிரிவு மாவட்ட காணிப் பதிவாளர் எம்.ஜீ. மனோரி உபமாலிகா
உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.