அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ஆண்களுக்கான
ஒற்றையர் சம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வென்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், வளர்ந்து வரும் டென்னிஸ்
நட்சத்திரமான பல்கேரியாவின் 21 வயது டிமிட்ரோவை உலகத் தர வரிசையில் 3 வது இடத்தில்
உள்ள ஆண்டி முர்ரே எதிர்கொண்டார்.
முதல் செட்டில் 4-1 என்று முன்னிலை பெற்று முர்ரேவிற்கு அதிர்ச்சி அளித்தார்
டிமிட்ரோவ். ஆனால், அதன் பிறகு உஷாரான முர்ரே முதல் செட்டை டை -பிரேக்கருக்கு கொண்டு
வந்தார்.
டை-பிரேக்கரில் தனது அபார சர்வ்கள் மூலம் 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதல்
செட்டை 7-6 என்று வென்றார் முர்ரே.
முதல் செட்டில் போராடிய முர்ரே, 2 வது செட்டை சரியாக கணித்து விளையாடி 6-4 என்ற
கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை வென்றார்.