ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, OCTOBER, 04, 2010
பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி
பல்கலைக் கழகங்களுக்கிடையிலான
மெய்வல்லுநர் போட்டி
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்க ளுக்கிடையே தற்போது ஜயவர்தனபுர பல்கலைக்கழக
மைதானத்தில் நடைபெறும். மெய்வல்லுநர் போட்டியில் ஓர் அங்கமாக இடம்பெற்று முடிந்த
‘கராட்டி’ சுற்றுப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தங்கப்பதக்கத்தையும்
மூன்று வெள் ளிப்பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டன.
தங்கப்பதக்கத்தை வவுனியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை மாணவன் சுவேந்தன்
பெற்றுக் கொண்டார். வெள்ளிப் பதக்கங்களை சர்மிக்கா, எம்.எம். அர்ஷாட், இரத்நாயக்க
ஆகியோரும் வெண்கலப்பதக்கங் களை சமிந்த லக்மல், எஸ். புவனகே என்ற மாணவனும்
சுவீகரித்துக் கொண்டனர்.