வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010


தென் மாகாணத்தில் 1725 ஏக்கரில் தென்னை பயிரிட நடவடிக்கை

தென் மாகாணத்தில் 1725 ஏக்கரில் தென்னை பயிரிட நடவடிக்கை

தென் மாகாணத்தில் 1725 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை பயிரிட தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரை ஏக்கர் நிலப் பரப்பில் தென்னை பயிரிடுவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை முன்வந்துள்ளது.

இதற்கென 3450 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுத்து இவர்களை தென்னை பயிர் செய்கையில் ஊக்குவிக்க 25 இலட்சம் ரூபாவினை தென் பிராந்திய அபிவிருத்தி அதிகாரசபை செலவிடவுள்ளது. (ஐ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »