வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

பஞ்சாப் மாநில இளைஞர்கள் கொலை விடயத்தில் துப்பு இன்னுமில்லை

பஞ்சாப் மாநில இளைஞர்கள் கொலை விடயத்தில் துப்பு இன்னுமில்லை

அவுஸ்திரேலியாவில் பஞ்சாப் மாநில இளைஞர்கள் கொல்லப் பட்ட விஷயத்தில் துப்பு கிடைக் காமல் அந்நாட்டு பொலிஸார் தவிக்கின்றனர்.

இதற்காக அவர்கள் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஏராளமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட நூறு இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பஞ்சாப் மாநில மாணவர்கள் நிதின் கார்க் மற்றும் ரஞ்ஜோத்சிங் ஆகியோர் கொல்லப் பட்டனர். மெல்போர்னில் தான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு செல்லும் வழியில் பஞ்சாப் இளை ஞர் நிதின் கார்க் குத்திக் கொல்லப் பட்டார்.

இவர் கடைசியாக ரயில் நிலை யம் வழியாக நடந்து சென்றதை பொலிஸார் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியை பார்த்து விசாரித்து வருகின்றனர். எப்படி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதே போல கடந்த மாதம் 29ம் திகதி ரஞ்ஜோத் சிங் என்பவர் கழுத்து நெரிக்கப்பட்டு பல முறை கத்தியால் குத்தப்பட்டு கடைசியில் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இவ ரது விஷயத்தில் இன்னும் துப்பு துலங்கவில்லை.

இது குறித்து தகவல் அளிக்கும்படி பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். கடைசியாக அவரிடம் பேசிய நபர்கள் குறித்தோ அல்லது கொலை சம்பவம் நடக்கும் போது அந்த வழியாக யாராவது சென்றிருந்தால் அது பற்றியோ தகவல் கொடுக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை துப்பு கிடைக்காததால் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •