60 செய்மதி றிkவர்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது
60 செய்மதி றிkவர்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது
(கே. அசோக்குமார்)
தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பெங்களூரிலிருந்து செய்மதி
தொலைபேசிகள் மற்றும் அதற்கு தேவையான 200 உபகரணங்களை கொண்டு வந்த கொழும்பைச் சேர்ந்த
ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் திணைக்கள
அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் மற்றொரு பயணப்பையிலிருந்து 50 கிலோ கிராம் விதைகளும்
கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இந்த விதைகள் கமத்தொழில் திணைக்களத்தின் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டதாகவும் அவர்
மேலும் தெரிவித்தார். 43 வயதான இவர் அடிக்கொரு தடவை இந்தியாவிற்கு சென்று வருபவர்
என்றும் இந்தியாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு வந்த விமானத்திலேயே அவர்
வந்திறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.