யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011 ஆம் ஆண்டு காணாமல் போன 32
பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து
போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
2011 ஆம் ஆண்டு மேற்படி ஆலயத்திற்குள் நுழைந்த திருடர் கள் அங்கிருந்த 32 பவுண்
தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலயத்திற்கு நேற்று முன்தினம் காலை பூசைகளை
செய்வதற்கு சென்ற பூசகர் ஆலய உள் வீதியில் தகரப் பேணியொன்று இருந்ததை அவதானித்தார்.
இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர்கள்
தெல்லிப்பழை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.