தாய்ப்பாலூட்டும் பழக்கத்தை பெண்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது அவசியம்
தாய்ப்பாலூட்டும் பழக்கத்தை பெண்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது அவசியம்
தாய்ப்பாலூட்டும் மாதம் திங்கட்கிழமை முதல் இலங்கையில் ஆரம்பமாகியது. ஒரு குழந்தை
பிரசவிக்கப்பட்ட ஒரு மணித்தியாலயத்திற்குப் பின்னர் அதற்கு முதற் தடவையாக தாய்ப்பால்
ஊட்டப்படுகிறது. இந்த தாய்ப்பால் பச்சி ளங் குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கு உணவாக
இருப்பதுடன், பலதரப்பட்ட நோய்களை தடுக்கும் ஒரு அருமருந்தாகவும், இயற்கை மனித
குலத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
கண்களில் சிவப்புத்தன்மை அல்லது ஏதாவது சிறு காயங்கள் ஏற்பட் டால், இன்று நாம்
உடனடியாக வைத்தியசாலைகளுக்கு விரைந்து சென்று, ஏதாவது மருந்தை எடுத்து, அதனை
குணப்படுத்துகி றோம். சுமார் 80 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வகை யான கண்
நோய்களுக்கும் தாய்ப்பாலே மருந்தாக பயன்படுத்தப் பட்டது. தாய்ப்பாலிலுள்ள ஏதோ
ஒருவித அபூர்வ சக்தியினால் இரண்டு அல்லது மூன்று துளி, பாதிப்புக்குள்ளான கண்களில்
விழுந்தவுடன், அந்த கண்நோய் மறுவினாடியே மறைந்துவிடும். அந்த அளவுக்கு தாய்ப்பால்
அபூர்வமான சக்தியைக் கொண்டி ருக்கிறது.
இலங்கையிலுள்ள தாய்மார்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் பெற்றெடுத்த
பிள்ளைகளுக்கு முதல் மாதத்தில் தாய்ப் பாலை ஊட்டுகிறார்கள். தெற்காசிய நாடுகளிலேயே
தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று வறுமை மற்றது தாய்ப்பாலை ஊட்டும் பழக்கம் தெற்காசிய நாடுகளில்
பாரம்பரியமாக இருந்து வருவதாகும்.
இலங்கையில் பாரம்பரிய முறையில் ஒரு தாய் குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு
வருடங்களுக்கு அடுத்த பிள்ளை பிறக் கும் வரை தனது பிள்ளைக்கு தாய்ப்பாலை ஊட்டுவார்.
இவ்விதம் தாய்ப்பாலை ஊட்ட தயங்கும் பெண்களுக்கு அன்று சமூகத்தில் எவ்வித மதிப்பும்
இருந்ததில்லை. பணிக்கு செல்லும் பெண்கள் கூட, காலையிலும், மாலையிலும் தங்கள்
குழந்தைகளுக்கு பாலூ ட்டிவிட்டு, செல்வதுடன் பணி நேரத்திலும் காலையில் ஒரு மணித்
தியாலமும் மாலையில் இன்னுமொரு மணித்தியாலமும் விசேட சலுகை விடுமுறையும் வழங்கக்
கூடிய வகையில் இலங்கையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இத்துடன் ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்டுவதன் மூலம் நாட் டின் தேசிய
பொருளாதாரத்தை அனாவசியமாக பால்மாவை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையும்
குறைக்கக் கூடிய வகையில் நாட்டிற்கு உதவியும் செய்கிறாள். ஆயினும், இன்று பண்டைய
பாரம்பரியங்களை நாகரீகம் என்ற ஒரு சாத்தான் தாய் மார்களை மறந்துவிடச் செய்யுமளவுக்கு
வலுப்பெற்று விளங்குகி றது.
தங்கள் உடலை கட்டாக வைத்து வசீகரமாக காட்சியளிக்க வேண்டு மாயின், தாய்ப்பால்
கொடுக்கும் பழக்கம் ஓரிரு மாதங்களில் கை விடப்பட வேண்டும் என்று இன்றைய நவீன உலகின்
தாய்மார் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பதனால் அவர்கள் தாய்ப் பாலை கொடுப்பதற்கு பதில்
தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாடு களிலிருந்து பெருமளவு பணத்தை விரயம் செய்து
இறக்குமதி செய்யப்படும் பால்மாவை கரைத்து போத்தல்களின் மூலம் பிள் ளைகளுக்கு
ஊட்டுகிறார்கள்.
செயற்கை பாலை ஊட்டுவதைக் கூட, தாய்மார் இன்று சரியாக செய் வதில்லை. அந்த
பொறுப்பையும் தன்னுடைய தாய்க்கு அல்லது வீட்டிலுள்ள ஒரு பணிப்பெண்ணிடம்
ஒப்படைத்துவிட்டு, குழந் தையை பெற்றெடுத்த தாய் அவசரமாக பணிக்கு சென்று விடும்
அல்லது ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி யுள்ளார்கள்.
இதனால் தான் தாய்க்கும் சேய்க்கும் இடையே இருக்கும் தாய்ப்பாசம் குறைந்து, அந்த
பிள்ளை தன்னை பராமரிக்கும் வேறொரு பெண் ணிடம் தாய்க்கு கொடுக்க வேண்டிய அன்பையும்
பாசத்தையும் செலுத்துகின்றது. ஒரு குழந்தைக்கு ஒரு தாய் முதல் மூன்று, நான்கு
வருடங்களுக்கு தொடர்ச்சியாக தாய்ப்பாலை ஊட்டி வளர் த்தால் அப்பிள்ளையின் மூளை
வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக் கும் பேருதவியாக இருக்கும் என்று சர்வதேச ரீதியில்
மேற்கொள் ளப்பட்ட பலதரப்பட்ட வைத்திய ஆய்வுகள் நிரூபித்து இருக்கி ன்றன.
குழந்தைப் பருவத்தில் சரியாக தாய்ப்பாலை குடிக்கும் வாய்ப்பை இழ ந்தவர்களே,
பிற்காலத்தில் பெரியவர்களானவுடன் அதிக ஆத்திர மடைந்து வன்முறைகளிலும் ஈடுபடக்கூடிய
மனோபாவத்தை கொண் டிருப்பார்கள் என்றும் வைத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த தாய்ப்பால் ஊட்டும் மாதத்திலிருந்தாவது தன் உதிரத்தை இரத்த மாக கருப்பையில்
இருந்த தன் குழந்தைக்கு ஊட்டி வளர்த்த தாய் மார் பிரசவத்தின் பின்னரும் போலி நாகரீக
பழக்க வழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு, தாய் என்ற கிடைப்பதற்கரிய பெருமை தன க்கு
கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தனது ஆசாபாசங் களை மூட்டை கட்டி வைத்துவிட்டு
தான் பெற்றெடுத்த பிள் ளையை நல்ல முறையில் பாலூட்டி வளர்த்து அவர்களை எதிர்
காலத்தில் நாட்டுக்கு பயன்தரக்கூடிய பிரஜைகளாக உருவாக்கும் பொறுப்பை சரியான
முறையில் நிறைவேற்றுவது அவசியமாகும்.