பள்ளியில் நீ பயிலும்
பருவத்தே சாலை தனில்
‘கள்ளியுந்தன் பார்வைக் காய்’
கணப்பொழுதும் ஏங்கி யவன்
சொல்லவொணாத் துய ரோடு
சோகத்தின் விளிம்பி னிலே
அல்லும் பகலும் தான்
அல்லலுறல் அறி வாயோ?
***
காலைக் கதிர் வரவில்
கடிமலர்கள் மலர்வு களில்
வாலையுந்தன் எழில் கொஞ்சும்
வடிவழகைக் காணு கிறேன்
சோலைக் குயில் தோற்கும்
சுந்தரியுன் குரல் தனையே
வாழ்வினிலே தினம் கேட்க
வாராதோ ஒரு பொழுது?
***
முத்தேயுன் நிலை யறிய
முடங்கல்பல சேர்த்தி ருந்தும்
எத்தனையோ மாதங்கள்
ஏகியதுன் பதில் இல்லை!
அத்தானைப் பார்த்தி டவும்
ஆசையுனக் கிலை யாமோ?
சொத்தேநான் தனித்தி ருந்து
“சுகம் காண்ப தெப்ப டியோ?”
காதல் சொல்ல கடிதம் எழுதி
வலியை சொல்ல வார்த்தை தேடி
உன் விழியை கண்டு தொலைந்து போகும்
அந்த வார்த்தை தேட nஜன்மம் வேண்டும்
சொல்ல வந்த காதல் மட்டும்
சொல்லாமலே நெஞ்சில் வாழும்
சுகமான கனமானதே .
- ருத்ரன்
கொள்வனவு
என்
குமர்கள் கிடக்கு
குடில்களும் இல்லாமல்
வளவுகளுக்கோ
வாங்க முடியாத விலை
அதனால்
வானத்தில் வளவுகளை
வாங்கப்போறன்
சந்திரனை உடைத்து
சரளைகளை எடுத்து
அஷ்திவாரம் ஒன்றை
அழகாக அமைக்கப்போறன்.
மேகத்தைக் கூப்பிட்டு
மேலால் அசையாது
மென்மையான கூரை ஒன்றை
வேயப்போறன்
நட்சத்திரங்களை
நாலா புறங்களிலும்
மின் விளக்குகளாக்கி
மிளிர வைக்கப்போறன்
தென்றலை அழைத்து
தேவைக்கு ஏற்றாற்போல்
ஒவ்வொரு அறைகளுக்கும்
ஒரு விசிறிகளாக்கப் போறன்
வானவில்லை வரவழைத்து
வண்ண நிறங்களைப் பூசி
வரன்களை யெல்லாம்
போட்டியிட வைக்கப்போறன்
வானவர்களை தூதுவிட்டு அவன்
வடிவமைத்த மாளிகைகள் போல்
என் ஏழைக் குமர்களுக்கும்
எண்ணப்படி கட்டப்போறன்.
அதற்காக
வானத்தில் வளவுகளை
வாங்கப்போறன்.
- நிந்தவூர் மக்கீன்ஹாஜ்
உன்
நினைவு
கடல் அலையாய்
தினமும் உன் நினைவலைகள்
என்னை உளவறையில்
கரை சேர்க்கின்றது
தினமும்....
பர்ஹானா ஸ¤பைர்
அகுரஸ்ஸ
தூறல்கள்... -ஜோதி
இலட்சியப் பாதை
வாழ்க்கை வண்டியில்
பல கனவுச் சுமைகளை
சுமந்துகொண்டும்
பல இலட்சியங்களை
தாங்கிக்கொண்டும்
என் முகத்திரையை
கிழித்துக்கொண்டும்
என் இலட்சிய
பாதையில்
முதற் காலடியை
எடுத்து வைக்கிறேன்
எனக்குள் அடையாள
முத்திரையை
பதிப்பதற்கு
- அப்பு கல்முனை
நியதி
கிளை பரப்பி
இலை துளிர்த்து
இயற்கையின் பிரதிபலிப்பாய்
சாலையோரத்தில் - அம்மரம்
யார் நட்டது?
யார் நீர் பாய்ச்சியது?
யாருக்கும் தெரியாது - ஆனாலும்
அதன் நிழலில் பலபேர்
பூ பிஞ்சாகி
பிஞ்சு காயாகி
காய் கனியாகும்
கண்கட்டி வித்தை பற்றி
கூடவே இருக்கும்
குருவிச்சை நண்பனுக்குக்கூடத் தெரியாது.
ஆடி பிறந்து விட்டால்
சத்திரமாய் மாறிவிடும்
சத்தியமாய் - அம்மரம்
காய்ந்த சுள்ளி கொண்டு அமைந்த
காக்கைக் கூட்டுக்குள்
காக்கைகள்அடைகாக்க
குயில் குஞ்சுகள்!
காற்றோடு இலை உரச
காய்களும் கனிகளும் தாங்கி
வீரியமாய் இருக்கும் - அம்மரத்தில்
விதவிதமாய் எத்தனையோ!
விருந்தாளிப் பறவைகள்.