புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருநாள் இன்று

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருநாள் இன்று

உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெரு விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதை யிட்டு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் ஈஸ் டர் பண்டிகை களைகட்டியுள்ளதுடன் ஆல யங்களில் இடம்பெறும் விசேட வழிபாடு கள், திருப்பலிகளில் பெருமளவில் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கொழும்பில் கொச்சிக்கடை புனித அந் தோனியார் திருத்தலம், கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயம், மட்டக்களப் பில் புனித மரியாள் பேராலயம், திரு கோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, சிலா பம், இரத்தினபுரி மற்றும் மேற்றிராசன பேராலயங்களில் விசேட உயிர்ப்புப் பெரு விழா திருப்பலிகள் அந்தந்த மறை மாவட்ட ஆயர்களினால் நிறைவேற்றப்பட்டன.

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தியானிக்கும் தவக்காலம் விபூதிப் புதனுடன் ஆரம்பமாகி 40 நாட்கள் விசேட வழிபாடுகள், சிலுவைப் பாதை தியானங்கள் ஆராதனைகளுடன் அனுஷ்டிக்கப்பட்டன.

குருத்தோலை ஞாயிறோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகியது. புனித வியாழக்கிழமை பாதம் கழுவும் சடங்கு, பெரிய வெள்ளியன்று சிலுவைப்பாதை யாத்திரை திருச்சிலுவை முத்தி செய்தல் போன்ற சடங்குகளும் இடம்பெற்றன.

அல்லேலூயா சனியான நேற்றைய தினம் பாஸ்கா வழிபாடுகள் இடம்பெற்று இன்றைய தினம் உயிர்ப்புப் பெருவிழா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் தமது சீடர்களுக்கு முதன் முதலில் தோன்றி உங்களுக்கு சமாதானம்’ என்றார். உயிர்த்த இயேசுவின் சமாதானம் உலகெங்கும் நிரந்தரமாக நிலைக்கட்டும்! (ஸ)

 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.