சனல் 4 ல் காட்டியதை பார்த்துச் சனம் அழுததாம், எங்கட சனம் ரி.வியில் தமிழ்
நாடகங்களைப் பாத்துவிட்டே அழுது புலம்புறதுகள். இப்படியொரு காட்சியைக் கண்டா
சும்மாவே! யுத்தம் எண்டா இப்படித்தானே. அழிவில்லை, சனம் சாகேலை எண்டு யாரும் சொல்லவே
இல்லையே. உந்த வீடியோவை பார்த்தா சண்டைக்குள்ள சனம் சிக்குப்பட்டு சாகத் துடிக்கும்
போதும் கூட படமும், வீடியோவும் எடுக்கிறதிலதான் இவை குறியா இருந்திருக்கினம்.
அதாலதான் உதில பெருத்த சந்தேகமாக இருக்குது!
* தமிழக தலைவர்களின் நீலிக்கண்ணீர்!
கலைஞரும், நடிகையும் இலங்கைத் தமிழருக்காக வடிக்கிற கண்ணீர் இந்து சமுத்திரத்தின்
நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கும். அந்தளவுக்கு தங்கட அரசியல் இருப்புக்காக நாடகம்
உதில ஒரு துளியையாவது இங்க யுத்தம் நடக்கேக்க காட்டியிருந்தா எத்தனை தமிழ்ச்சனம்
உயிர் பிழைத்திருக்கும். அப்ப கவிதை எழுதியும் அறிக்கை விட்டும் நடித்துவிட்டு இப்ப
நடந்ததெல்லாத்தையும் சனம் கெட்ட கனவா நினைத்து நிம்மதியா வாழ்ந்து வரேக்க ஏன் இந்த
குரங்குச் சேட்டை. இலங்கைத் தமிழரை நிம்மதியா வாழ விடுவதில்லையெண்டு நீங்க
முடிவெடுத்து விட்டீங்களோ?
* எல்லாரும் மனுசர் தானே!
முஸ்லிம்கள் புலிகளால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்துரைத்திருக்கினம்.
உண்மைதான். சனல் 4 ஐ பார்க்கும் போது அந்தச் சனம் மூட்டை முடிச்சுக்களுடன் ஓடி
வருவதைப் பார்த்தா அண்டைக்கு வடக்கிலயிருந்து இப்படித்தானே அப்பாவி முஸ்லிம்களையும்
புலிகள் மூட்டை முடிச்சுக்களோட ஓட ஓட அனுப்பி வைத்தவை எண்டதுதான் ஞாபகத்துக்கு
வருகுது. அந்த நேரம் யாராவது வீடியோ எடுத்திருந்தா அதை புலி - 4 எண்டு
ஒளிபரப்பியிருக்கலாம். எல்லாரும் மனுசர் தானே!