இலங்கை சின்மயா மிஷன், சைவ மங்கையர் கழகத்துடன் இணைந்து வழங்கும் “அகம் மலரட்டும்”
நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தினமும் மாலை 6.30 முதல்
8.00 மணி வரை வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் இந்தியாவின் மதுரை நகரிலிருந்து வருகை தரும் சுவாமி சிவயோகானந்தா
மனக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு, மனத்தூய்மை, வாழ்வில் உயர்தல், நன்னூல்கள்
காட்டும் வழிகள் என்பன பற்றி தமிழில் உரை நிகழ்த்துவார்.
இதே தினங்களில் காலை 6.30 முதல் 7.30 வரை கொள்ளுப்பிட்டி இல. 32, 10 ஆவது
ஒழுங்கையிலுள்ள இலங்கை சின்மயா மிஷன், சின்மயா பிரகதியில் சுவாமி சிவயோகானந்தா உரை
நிகழ்த்தும் பகவான் ரமண மகரிஷியின் போதனை களுடனான “ஞானவிசாரம்” நிகழ்வு இடம் பெறும்.
இந் நிகழ்வுக்கு அனுமதி இலவசம் என்றும் சின்மயா மிஷன் அறிவித்துள்ளது.