புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
சுவாமி சிவயோகானந்தாவின் இருவேறு சமய நிகழ்வுகள்

அகம் மலரட்டும்; ஞான விசாரம்

சுவாமி சிவயோகானந்தாவின் இருவேறு சமய நிகழ்வுகள்

இலங்கை சின்மயா மிஷன், சைவ மங்கையர் கழகத்துடன் இணைந்து வழங்கும் “அகம் மலரட்டும்” நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தினமும் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் இந்தியாவின் மதுரை நகரிலிருந்து வருகை தரும் சுவாமி சிவயோகானந்தா மனக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு, மனத்தூய்மை, வாழ்வில் உயர்தல், நன்னூல்கள் காட்டும் வழிகள் என்பன பற்றி தமிழில் உரை நிகழ்த்துவார்.

இதே தினங்களில் காலை 6.30 முதல் 7.30 வரை கொள்ளுப்பிட்டி இல. 32, 10 ஆவது ஒழுங்கையிலுள்ள இலங்கை சின்மயா மிஷன், சின்மயா பிரகதியில் சுவாமி சிவயோகானந்தா உரை நிகழ்த்தும் பகவான் ரமண மகரிஷியின் போதனை களுடனான “ஞானவிசாரம்” நிகழ்வு இடம் பெறும். இந் நிகழ்வுக்கு அனுமதி இலவசம் என்றும் சின்மயா மிஷன் அறிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.