லீல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும்
எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள
முடியும். ஆனால் நண்பர்களிலே நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான்
தெரியுமே தவிர சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூனிக்குழைபவன், கூழைக் கும்பிடு
போடுபவன் இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்த நேரத்தில் அவன்
உன்னைக்கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.
ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளும் முன் அவனைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள
வேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான் அவனுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள
வேண்டும் “சிறகுகள் கிடைத்தால் பறப்பதுமட்டும் நட்பல்ல சிலுவைகள் கிடைத்தால்
அதைச்சுமப்பதும் நட்பு.
ஆர். லுஷாந்தினி...-
புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை.