ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்கள கனிஷ்ட ஊழியர்கள் 300 பேருக்கு நிரந்தர நியமனம்

சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்கள கனிஷ்ட ஊழியர்கள் 300 பேருக்கு நிரந்தர நியமனம்

பல வருட காலமாக சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கனிஷ்ட ஊழியர்கள் 300 பேரின் சேவைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள மாகாண சபை வைத்தியசாலைகளில் பணியாற்றும் இந்த கனிஷ்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதற்கு மேலதிகமாக சப்ரகமுவ மாகாணத்திலே ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிமார்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. சுமார் 38 தாதிமார்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி