கிரியெல்ல - அயகம பொலிஸ் பிரிவுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
கிரியெல்ல - அயகம பொலிஸ் பிரிவுகளில் குற்றச் செயல்கள்
அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
(பலாங்கொடை தினகரன் நிருபர்)
இரத்தினபுரி மாவட்டத்தில் இரியெல்ல, அயகம பொலிஸ் பிரிவுகளிலே ஒரு குறிப்பிட்ட
குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றச் செயல்களினால் பொதுமக்கள் அச்சத்துடன்
வாழவேண்டிய சூழல்நிலை உருவாகியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
இந்த குற்றச்
செயல்களில் மனித படுகொலைகளும் இடம்பெற்றுள்ள தாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற
உறுப்பினர். சாட்சி சொல்லக்கூடியவர்களுக்கு போதிய பாதுகாப்பு இன்மையால் பீதியுடன்
வாழ்வதாகவும் தெரிவித்தார்.
சாட்சி சொல்ல வழக்குகளுக்கு சாட்சியாளர்கள் ஆஜராகாமையினால், கொலையாளிகளுக்கு
நீதியின் மூலம் உரிய தண்டனை கிடைக்காமையினால் குற்றச் செயல்கள் தொடர்ந்து
அதிகரிப்பதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்த முறைப்பாட்டுக்கு பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,
கொலையாளி என்ற குற்றத்துக்கு ஆளாகுபவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளியே
வருவதால் பொலிஸாருக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத்
தெரிவித்தனர்.