ஆசிரியரைப் பார்த்து மாணவன் ஒருவன், “ஐயா! நீங்கள் இறைவனைக் காணலாம் என்கிaர்கள்,
என் கண் எதிரில் இறைவனைக் காட்டுங்கள். அப்பொழுதுதான் நான் நம்புவேன்” என்றான்.
“என்னுடன் வா, உனக்குக் காட்டுகிறேன்” என்ற அவர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.
ஏரிக் கரையை அடைந்த இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். திடீரென்று அவர்மாணவனுடைய
தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அவன் துடிதுடித்தான். சில
வினாடிகள் சென்றதும் அவர் அவனைக் விட்டார்.
தண்ணீருக்கு மேலே வந்த அவன் பரபரப்புடன் மூச்சை இழுத்து விட்டான்.
“எப்படி இருந்தது?” என்று கேட்டார் அவர். “மூச்சு விட வேண்டும் என்று நான்
துடிதுடித்து விட்டேன்” என்றான் அவன்.
“தண்ணீருக்குள் இருந்த போது மூச்சு விட எப்படித் துடித்தாய்? அப்படிப்பட்ட துடிப்பு
இறைவனைக் காண வேண்டும் என்று உன்னுள் எழ வேண்டும். அப்படி எழுந்தால் நீயும் இறைவனைக்
காணலாம்” என்றார் அவர்.