திக்குவல்லை கிரிக்கெட் போட்டியில் மதுராபுர றோயல் கழகம் வெற்றி
திக்குவல்லை கிரிக்கெட் போட்டியில்
மதுராபுர றோயல் கழகம் வெற்றி
வெலிகம தினகரன் நிருபர்
திக்குவல்லை பிரதேச சபை மற்றும் வியாபாரசங்கம் ஆகியன இணைந்து நடாத்திய மாபெரும்
கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெலிகம மதுராபுர றோயல் கழகம் வெற்றியீட்டி ஒரு
இலட்சம் ரூபா பரிசுத் தொகையையும், டி.ஸி.எல். வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்துக்
கொண்டது. திக்குவல்லை “ஜொலி” போய்ஸ் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
திக்குவல்லை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியின், இறுதி நாள்
பரிசளிப்பு விழாவில், இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்
பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.