ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது

ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடிகிறது

- கருணாநிதி கவலை

இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடக்கிறது என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறினார். தி. மு. க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருக் கிறாரே?

உலகிலேயே குறிப்பாக இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல.

தயாநிதி மாறனுக்கு திமுக துணையாக இருக்குமா? இவ்வளவு நாளாக அப்படி ஒன்றும் தெரியவில்லையே? இதுவரை என்ன நடந்தது. இப்போது தானே நடைபெறுகிறது. தயாநிதி மாறனுக்கு பதில் வேறு யாராவது மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்களா? இப்போது தெரியாது காங்கிரஸ் தரப்பில் இருந்து சோனியா காந்தியோ அல்லது வேறு யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா? தொடர்பு கொள்ளவில்லை. பிரதமருக்கு கடிதம் எழுதினிர்களா? அது உங்கள் கற்பனை இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி