இந்தியா - பாகிஸ்தான் பேச்சு டில்லியில் 27ல் நடக்கிறது
இந்தியா - பாகிஸ்தான் பேச்சு
டில்லியில் 27ல் நடக்கிறது
முதல் கட்ட பேச்சு இஸ்லாமாபாத்தில் நடந்தது
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்து, எதிர்வரும் 27ம் திகதி
டில்லியில், பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி
வெளியாகியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை,
கடந்த மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில், இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள்
மட்டத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இருநாட்டு வெளியுறவுத்துறை
அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, வரும் 27ம் திகதி, டில்லியில் நடைபெறும்
என்று பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஹீனா ரபானி கர்.
அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக
அச் செய்தியில் கூறப்ப ட்டுள்ளது. இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள்
சந்திப்பிற்கு முன்பு, இம் மாத மத்தியில், இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில்,
நம்பிக்கை உருவாக்குதல், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு
விரிவாக்கம், வர்த்தகம் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றி சேப்படும் என்று அச்செய்தியில்
கூறப்பட்டுள்ளது. இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம்
காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.