தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதை தடுக்க பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு
தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதை
தடுக்க பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு
தேர்தல் ஆணையாளர்
எம். ஐ. நிஸாம்தீன்
தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல்கள் திணைக்களத்துடன்
இணைந்ததாக பொலிஸ் முறைப்பாட்டு பிரிவொன்று நேற்று முதல் செயற்பட்டு வருவதாக
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்த பொலிஸ் முறைப்பாட்டு பிரிவானது சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கீழ்
செயற்படுமென அவர் மேலும் கூறினார்.
இதன்படி ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மற்றும்
பிரதேசங்களில் இடம்பெறும் அரசியல் வன்முறை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு
எதிராக தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கு பதிலாக அப்பிரதேசத்திற்கு
பொறுப்பான பொலிஸ் திணைக்களத்தில் இயங்கும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்க
முடியும்.
இது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்தினால் உடனடியாக வன்முறைகள் ஏற்படுவதை
தடுக்க முடியும். அத்துடன் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்திக்
கொடுக்க முடியும்.
இந்த பொலிஸ் முறைப்பாட்டு பிரிவானது தேர்தல் நிறைவு பெறும் வரை செயற்படுமெனவும் அவர்
மேலும் தெரிவித்தார்.