ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, OCTOBER 15, 2009
காலநிலையில் திடீர் மாற்றம்
காலநிலையில்
திடீர் மாற்றம்
(மர்லின் மரிக்கார்)
காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து
முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் ‘டொனேடோ’ சுழற்காற்று அல்லது கடும் காற்று
ஏற்படலாம் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டிருக்கின்றது.
இடைப் பருவபெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் பாதிப்பு, மற்றும்
டொனேடோ சுழற் காற்று, கடும் காற்று குறித்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு
வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் துலாரி பெர்னாண்டா நேற்றுத் தெரிவித்தார்.