வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பில்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

சர்வதேச ஆசிரியர் தினத்தை யொட்டி மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களுக்கி¨ டயிலான மரதன் ஒட்டப் போட்டியொன்று நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்வியலுவலகப் பிரிவிலுள்ள ஆரையம்பதி, ஏறாவூர்பற்று-1, மன்முனை வடக்கு, மண்முனை மேற்கு ஆகிய கல்விக் கோட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கிடையிலான இம்மரதன் ஓட்டப்போட்டியை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இ. போல் ஆரம்பித்து வைத்தார்.

60 ஆசிரியர்கள் பங்குபற்றிய இம்மரதன் ஓட்டப்போட்டி ஆரையம்பதி மகா வித்தியால யத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப் பட்டு மட்டக்களப்பு வெஸ்ரீ மைதானத்தில் நிறைவு பெற்றது.

இப்போட்டியில் ஏறாவூர்பற்று- 1 கல்விக்கோட்டத்தைச் சேர்ந்த மாவடியாறு அகிலன் வித்தியாலய ஆசிரியர் எஸ். சோமசுந்தரம் முதலாம் இடத்தினையும் அதே கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த கரடியணாறு மகாவித்தியாலய ஆசிரியர் எஸ். சிவசங்கர் இரண்டாவது இத்தினையும், மண்முனை மேற்கு கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த நரிப்புள் தோட்டப் பாடசாலையின் ஆசிரியர் எம்.ரவீந்திரன் மூன்றாவது இடத்தினையும் பெற்றனர்.

எதிர்வரும் 24ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கிடையிலான விளையாட்டு விழாவின் போது இவர்களுக்கான பரிசில்கள், இப்போட்டியில் கலந்து கொண்ட ஏனைய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப் படவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •