ப்ரியா ஆனந்த் பந்தா காட்டாத நடிகை என்று புகழ் மழை பொழிந்துள்ளார் இயக்குனர் ஆனந்த்
சர்மா. இவன் வேற மாதிரி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் அரிமா
நம்பி. பிரியா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு
தயாரிக்கிறார். ட்ரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். இந்நிலையில் அரிமா நம்பி படத்தின்
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஆனந்த் சங்கர், நான் உதவி இயக்குனராக
பணியாற்றியபோது பல கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வந்தால் என்னென்ன அலம்பல்
பண்ணுவார்கள் என்று நானே பார்த்திரு க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் நாயகியான
ப்ரியா ஆனந்த் ரொம்ப வித்தியாசமானவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் எந்த
பந்தாவும் காட்ட மாட்டார். ஹீரோயின்கள் வழக்கமாகக் கேட்கும் பல விடயங்களை அவர்
கேட்டதே இல்லை. மேலும் இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட இரு ப்பார்களா? என்றும்
இப்படியெல்லாம் இருந்தா, உங்களை ஹீரோயின்னு நாங்களே நம்ப மாட்டோம்.கேரவன் சரியில்ல,
'ரூம் நல்லால்ல, சரியா கவனிக்கல, இப்படி எதையாவது சொல்லி சண்டை போடுங்க, என்று நாங்
களே ஜhலியாக கலாய்க்கும் அளவுக்கு அவர் எளிமையாக நடந்து கொண்டார் எனவும்
கூறியுள்ளார்.