சிவா இயக்கத்தில் தல அஜpத் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம்
கிளைமேக்ஸ் காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது.தற்போது
தயாரிப்பாளர் சங்கம் ஒன்றினைந்து சில திரையரங்குகளுக்கு எதிராக, தங்கள் எதிர்ப்பை
காட்ட அக்டோபர் மாதம் 23ம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் சில நாட்களுக்கு
எந்த படங்களையும் ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.இதனால் அஜpத் படம்
வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது!
போட்டி இருந்தால் தான் திரை உலகில் முன்னேற முடியும்! - தமன்னா
tamanna-bhatia-wallpaper-14தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும்
தமன்னா திரை உலகில் போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் என்று கூறுகிறார்.
தமன்னா இது குறித்து அவர் அளித்த பேட்டி:-எனது படங்கள் வெற்றி பெறுவது எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் மட்டும்தான் திரை உலகில் இருக்க வேண்டும் என்று
விரும்பவில்லை. நான் மட்டும் நடித்தால் 'போர்' அடித்து விடும். எனவே என்னைப் போல்
எல்லோரும் நடிக்க வேண்டும்.
'பாகுபலி' படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும், அந்த
படத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயரை சொல்லி அன்புடன் அழைக்கிறார்கள். இது
எனக்கு பெருமையாக இருக்கிறது.
நான் இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும்
நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கிறது.தென் இந்திய நடிகைகள் அனைவரும்
திறமையானவர்கள். நிறைய நடிகைகள் இருப்பதால்தான் எந்த படத்துக்கு யார் தேவை, யார்
திறமைசாலி என்பதை தெரிந்து பொருத்தமான நடிகையை தேர்வு செய்து நடிக்க
வைக்கிறார்கள்.என்னுடன் போட்டி போட நிறைய நடிகைகள் வேண்டும். போட்டி இருந்தால்தான்
திறமையாக நடித்து திரை உலகில் முன்னேற முடியும்.
புலிக்கு போட்டியா பாயும் புலி - சுசீந்திரன் அதிரடி பதில்
இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் புலி. அதேபோல் வி'hல்
நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளிவந்துள்ள படம் பாயும் புலி.
ஆனால், புலி டைட்டிலுக்கு போட்டியாக தான் பாயும் புலி வைக்கப்பட்டது, இந்த இரண்டு
படங்களுக்கும் ஒரே நாளில்
இசை வெளியீட்டு விழா நடக்க, வி'hல் வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என ஒரு வதந்தி
பரவியது.
இதற்கு விளக்கம் தரும் வகையில் நம் சினி உலகம் நேயர்களுக்கு பேட்டியளித்த
சுசீந்திரன் கூறுகையில், 'வி'hல் தீவிர விஜய் ரசிகர், அப்படியிருக்க அவர் ஏன்
போட்டிப்போட வேண்டும். மேலும், நாங்கள் இசை வெளியீட்டு விழாவை ஒரு மாதத்திற்கு
முன்பே முடிவு செய்து விட்டோம், இவை எல்லாம் யதார்த்தமாகவே நடந்த வி'யங்கள்' என்று.