அமெரிக்க வான் தாக்குதலில் அல் கொய்தா கிளை தலைவர் பலி
அமெரிக்க வான் தாக்குதலில்
அல் கொய்தா கிளை தலைவர் பலி
சிரேஷ்ட அல் கொய்தா உறுப்பினரும் செப்டெம்பர் 11 தாக்குதல் பற்றி முன்கூட்டியே
தெரிந்திருந்தவருமான முஹ சின் அல் பாதில் அமெரிக்க வான் தாக்குதலில் சிரியா வில்
கொல்லப்பட்டுள்ளார்.
அல் கொய்தாவின் நிழலில் இயங்கும் கொரசான் என்ற குழுவின் தலைவரான இவர் சிரியாவின்
இதிலிப் மாகா ணத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இலக்கு வைக்கப்பட்டதாக
பென்டகன் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜ{லை 8 ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்
டுள்ளது.
பெரிதாக தெரியவராத கொரசான் குழுவின் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக
அமெரிக்கா கடந்த செப்டெம்பரில் அறிவித்ததை அடுத்தே அந்த குழு பற்றி வெளியுலகுக்கு
தெரியவந்தது. ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் சிரேஷ்ட அல்கொய்தா உறுப்பினர்களைக் கொண்டே
இந்த குழு அமைக்கப் பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
இதில் அல் கொய்தா தலைவர் ஐமன் அல் சவாஹிரி இந்த குழு உறுப் பினர்களை சிரியாவுக்கு
அனுப்பி இருப்பதாக குறிப்பிடும் அமெரிக்க அதிகா ரிகள், இவர்கள் குண்டு
தாக்குதல்களுக்கு மேற்குலக கடவுச்சீட்டு வைத் திருப்போரை தேடி வருவதாகவும்
தெரிவித்தார்.
குவைட் நாட்டவரான பாதிலின் தலைக்கும் அமெரிக்கா 7 மில்லியன் டொலர்களை
நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.