இலங்கையுடனான இரண்டு இருபது - 20 போடிகளுக்கான பங்களாதேஷ் அணிக்கு மஷ்ரபி மோர்தஸா
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முடிந்த இலங்கையுடன் இரண்டாவது
டெஸ்டில் பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பீகுர் ரஹீமின் விரவில் காயம் ஏற்பட்டதை
தொடர்ந்தே அவருக்கு பதில் மோர்தஸாவிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தமீம் இக்பால் தொடர்ந்தும் உப தலைவராக இருப்பார் என்றும் அனுபவத்தை
கருத்தில் கொண்டு மோர்தஸாவுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இரு இருபது - 20 போட்டிகளும் எதிர்வரும் 12, 14 ஆம் திகதிகளில்
சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது.