இலங்கை ஆயுள் காப்புறுதி துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லை/ப் அதன்
13வது பிரணாம புலமைப் பரிசில் திட்டத்துக்கு தகுதியான 160 இளம் சாதனையாளர்களைத்
தேடும் படலத்தை தொடங்கியுள்ளது. மொத்தம் 8.3 மில்லியன் ரூபா இந்தத் திட்டத்தின் கீழ்
வழங்கப்படவுள்ளது. அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் இந்த வைபவம் இடம்பெறவுள்ளது.
இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை செலிங்கோ லை/ப்பின்
நாடு தழுவிய 247 கிளைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கம்பனி
அறிவித்துள்ளது. கல்வி மற்றும் கலை விளையாட்டு கலாச்சார நடவடிக்கைகள் போன்ற
துறைகளுக்கு இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படும்.
"கடந்த 12 ஆண்டுகளில் இலங்கையின் வருங்கால தலைவர்கள் பலருக்கு இந்தப் புலமைப்
பரிசில் திட்டம் ஊக்குவிப்பை அளித்துள்ளது" என்று கூறினார் செலிங்கோ லை/ப்பின்
முகாமைத்துவப் பணிப்பாளரும'; பிரதம நிறைவேற்று அதிகரியுமான ஆர்.ரெங்கநாதன். "இவர்களுள்
பலர் மருத்துவம், பொறியியல், சட்டம் என
பல்வேறு துறைகளில் ஏற்கனவே பிரகாசிக்கத் தொடங்கியுள்ளமை திருப்தி அளிப்பதாக உள்ளது"
என்று அவர் மேலும் கூறினார்.
செலிங்கோ லை/ப் இதுவரை 1614 இளைய தலைமுறையினருக்கு 83 மில்லியன் ரூபா பெறுமதியான
பிரணாம புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.
செலிங்கோ லை/ப் காப்புறுதியைக் கொண்டுள்ளவர்களின் பிள்ளைகள் மத்தியில் ஐந்தாம் ஆண்டு
புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகள்,
க.பொ.த சாதரண தரம் மற்றும் உயர் தரம் ஆகியவற்றில் சிறந்த பெறுபேறினைப் பெறும் மாணவ
மாணவிகள், விளையாட்டு கலாசாரம், கலை, நாடகம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் ஆகிய
துறைகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகள் ஆகியோருக்கே பிரணாம
புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது. இது தவிர செலிங்கோ லை/ப் அதன்
காப்புறுதிதாரர்களின் பிள்ளைகளுள் கபொ.த உயர் தரத்தில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம்,
மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு விN'ட பணப்
பரிசிலையும் வழங்குகின்றது.