வெலிகம வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயம்
வெலிகம வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயம்
(வெலிகம தினகரன் நிருபர்)
வெலிகம பிரதான பஸ் நிலையத்துக்கருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பொலிஸ்
அதிகாரி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் 26ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த மோட்டார்
சைக்கிளொன்று, முச்சக்கர வண்டிகள் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பொலிஸ்
அதிகாரி, அவரது மனைவி, பிள்ளை ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். மரண
வீடொன்றுக்குச் சென்று விட்டு வெலிகம வெலிப்பிட்டியவில் அமைந்துள்ள அவர்களது
வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார்
சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.