ஆறாவது ஐ.பி.எல், தொடரின் சில போட்டிகளில் காம்பீர் பங்கேற்கமாட்டார் ஆறாவது
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) வரும் ஏப். 3ல் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல்
போட்டியில் “நடப்பு சாம்பியன்” கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ்
அணியை எதிர்கொள்கிறது.
இதில், கொல்கத்தா அணியின் தலைவர் காம்பீர் பங்கேற்க வாய்ப்பு இல்லை. இவருக்கு
மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து குணமடைய குறைந்தது மூன்று வாரங்கள்
தேவைப்படும்.
இதனால், சில போட்டிகளில் விளையாட மாட்டார் இதையடுத்து தலைவராக பிரண்டன் மெக்லம்
அல்லது தென்னாபிரிக்காவின் அனுபவ வீரர் கலிஸ் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.